கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ்.லக்சன் என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here