சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்குஅழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here