16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இந்த நினைவு தின நிகழ்ச்சி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ நினைவுச்சின்னத்துக்கு முன்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் இந்த இராணு நினைவு தின தேசிய நிகழ்ச்சியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்ஷல் ஒஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.







