Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மன்னார் கடற்கரை பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அகழ்வு..!

மன்னார் மாவட்ட இளைஞர்களால் பிளாஸ்டிக்  பொருட்களை அகழ்வு செய்யும்   சிரமதானம் நேற்று சனிக்கிழமை(24) மன்னார்  கோந்தப்பிட்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் பிரியந்தா ஏற்பாட்டில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தலைமையில், குறித்த சிரமதான பணி இடம் பெற்றது. இதன் போது சேகரித்த...

மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் எனவும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்றும் கூறப்படுகிறது. தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது. மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள்  வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

பொலிஸார் தலையீடு காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம்…!

பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (24.08) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட...

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று…!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரமாண்டமான முறையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அதற்கான...

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை…!

ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கும்  அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக அந்த நபரும் அவரது சகோதரரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிரில்டன்வத்தை - மீவனபலான பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர்...

நிறுவனங்களால் மீளப் பெறப்பட்ட 5000 வாகனங்கள்…!

லீசிங் தவணையை சரியாக செலுத்த தவறிய குற்றச்சாட்டில் இவ்வாண்டின் கடந்த 8 மாதக் காலப்பகுதியில் 5000 வாகனங்களுக்கும் அதிகமானவை அந்தந்த நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக லீசிங் மற்றும் கடன் வழங்குநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 10000க்கும் அதிகமான வாகனங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீசிங் தவணைகளை வழங்குவதாக வாகனங்களைப் பெற்று நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தவணைகளை...

தடம் புரண்ட மருதானை நோக்கி பயணித்த ரயில்…!

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25.08) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் தடம் புரண்டதால் மருதானை ரயில் நிலையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார். மேலும், தடம் புரண்ட ரயிலை அகற்றும் வரை போக்குவரத்து நடவடிக்கைகள்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை, சுற்றுச்சூழல் மற்றும் தேவாலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெய்ரா ஏரியில் சடலம் மீட்பு…!

கொம்பன்னாவிடிய, பாலதக்ஷ மாவத்தைக்கு அருகில் உள்ள பெய்ரா ஏரியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் பேரில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புஞ்சி பொரளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் கணவர்…!

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் 26  வயதுடைய கணவர் வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று சனிக்கிழமை (24.08)  இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்தப்போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...