Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு; வென்னப்புவ பிரதேசத்தில் சம்பவம்…!

வென்னப்புவ பிரதேசத்தில் கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக மனைவியின் உடலில் கணவன் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதான...

படுத்துறங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்…!

புது குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மன்னகண்டல் பகுதியில் இரவு வேலைகளில் கால்நடைகளில் அடைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பட்டியில் இரவு காவல் கடமைக்காக சென்று இரவு படுத்து உறங்கிய நிலையில் 18.08 காலையில் படுத்துறங்கிய இடத்திலேயே இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இறந்தவர் கந்தையா மோகனதாஸ் எனும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது. அத்துடன், இறந்தவரின்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் மூவர் கைது…!

கசிப்பு விற்பனையாளரிடமிருந்து 6000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பெந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் கொஸ்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொலிஸ் உப பரிசோதகர், பொலிஸ் சர்ஜன்ட் மற்றும் பொலிஸ் சாரதி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் வழங்கிய நபர் தனது கையடக்கத் தொலைப்பேசியில் இலஞ்சம் கொடுப்பதை காணொளியாக...

விவசாயத்துறை வீழ்ச்சிக்கு தற்போதைய ஜனாதிபதி தான் காரணம்;சஜித்…!

நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள்   துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ளோம். அரசாங்கம் அதனை ஒரு சதத்திற்கேனும் கருத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நிறுவியிருந்த சந்தர்ப்பத்தில், நட்ட ஈடு...

வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது…!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்...

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்…!

இன்று (18.08) நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர், தேர்தல் உத்தியோகத்தர் என்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க இன்று (18.08) தெரிவித்தார். கிராம அலுவலர் சேவை...

வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர்; சரத்பொன்சேகா…!

வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர் என ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் 13 வது திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பல விடயங்களை செய்ய முயல்வதன் மூலம் ஒருவர் சமூகங்களின் மத்தியில் பகைமை உணர்வை உருவாக்ககூடாது. இந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை கண்காணித்து வரும் அமெரிக்கா…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர்...

வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருவோர்களை தாக்கப் போவதாக காட்சிபடுத்தப்பட்ட விளம்பரங்கள்…!

மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருவோர்களை தாக்கப் போவதாக விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். தங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை வசதி, விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினை,...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்ய வேண்டும்; ஜனக பண்டார…!

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பிறிதொரு சின்னத்தை வழங்குங்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமக்க வழங்கியுள்ள சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடியும் என மக்கள் போராட்ட சிவில் அமைப்பின் பொதுச்செயலாளர்  ஜனக பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில்...
- Advertisement -

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...