Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தென் பகுதி மாணவர்கள் வடக்கின் யாழ்பாணத்திற்கு விஜயம்..!

இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் தென் பகுதி மாணவர்கள் வடக்கின் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவின் சூரிய கற்கை நிறுவனத்தில் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியினை கற்கும் சிங்கள மாணவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டாம் மொழி கற்கை நிறுவனமான சூரிய கற்கை நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளனர். ...

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து..!

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்...

கரடியனாறில் விபத்து ; ஒருவர் பலி..!

மோட்டார் சைக்கிள் - வேன் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார் . இவர் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே பாதை மாறி வந்த வேன் குறித்த நபர் மீது மோதியதில் இந்த...

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி! -ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் மீட்பு நடவடிக்கை வெற்றி-

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட...

ஜனாதிபதி உரை பொய்களும் புனை கதைகளும் நிறைந்தது. வரிசைகளை நிறுத்தி தலைமேல் கடன் சுமை இது சாதனையா?. சுரேஷ் கேள்வி.

வங்குறோத்து நாட்டை நானே மீட்டவன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக போட்டியிடும் கனவுடன் பொய்களையும் புனைகதைகளையும் புனைந்தவாறு ஜனாதிபதியின் உரை அமைந்ததாக ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதை பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக விவேகானந்த வித்தியாலயம்..!

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதை பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக விவேகானந்த வித்தியாலயம் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டது. குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக  அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகிறது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று(28) இடம்பெற்ற  நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாடாளவிய ரீதியில்...

வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர்! பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு..!

வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த  மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச  தமிரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மக்களை  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

கிளிநொச்சியில் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் இரண்டாம் நாள் இன்று ..!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து  நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நேற்றைய தினம்(28.06.2024)  கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. மேலும் இன்றைய நாள்  இரண்டாம் நாளான  29.06.2024  போட்டிகள் தொடர்ந்து செல்கின்ற நிலையில் ஒன்பது மாகாணத்திலிருந்து கபடி போட்டிக்கான தேசிய...

ஜப்பான் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்களுக்கிடையில் கலந்துரையாடல்.!

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்...

சீதுவையில் கைப்பற்றபட்ட 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்…!

சீதுவையில் உள்ள சரக்கு விமான சேவைகள் மூலமாக தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி  நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆறு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதிகள் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதால்  சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில்,...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...