Saturday, July 11, 2026
No menu items!

News Line

சங்கிலியுடன் ஆற்றில் பாய்ந்த திருடன்..!

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நேற்று  பொலிஸ் குழு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முற்பகல் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 40 வயதுடைய சந்தேக...

அதிகரித்த இளநீரின் விலை..!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரித்துள்ளது. இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் இளநீர் ஒன்று 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 180 ரூபா முதல் 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில்...

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!

இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து இந்திய அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த...

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் சடலம்..!

வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று  (22) அதிகாலை தனது வர்த்தக நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரெ.நேசேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக...

வீதியெங்கும் வழிந்தோடும் எரிபொருள்..!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் இன்று (22) அதிகாலை டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அரச பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியுள்ளது. இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த எரிபொருளில் சறுக்கி விபத்துக்குள்ளானதுdan அரச...

பணம் பறிபோகும் ஆபத்து மக்களுக்கு எச்சரிக்கை..!

நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்கு  தவறான வழிகளை பயன்படுத்துவதால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசரகாலத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. தற்போது Meta, Messenger என அழைக்கப்படும் Facebook போன்ற சமூக ஊடக தளங்களில், பிரமிட்...

இலங்கையில் அதிகரிக்கும் தோல் தொற்றுநோய்..!

இலங்கையில் டீனியா என பெயரிடப்பட்ட தோல் தொற்று நோய் ஒன்று பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சகல வயதினருக்கும் இந்த நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, உடலின் எந்தவொரு பாகத்திலும் இந்த நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக கூறப்படுகிறது. வியர்வை அதிகளவில் படியக்கூடிய உடல் பகுதிகள் மற்றும் தலையில் இந்த நோய் தாக்கம்...

குற்றச்செயல்கள் குறித்து பணப்பரிசு: பொலிஸார் அறிவிப்பு..!

நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளத்தாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா...

சிறைத்தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
- Advertisement -

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...