Saturday, July 11, 2026
No menu items!

News Line

கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவன சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி பியூமி அபேசுந்தர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள்...

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்  

நடைபெற்ற இலங்கை மற்றும் பங்ளாதேஷ் அணிகளுக்கிடயிலான இரண்டாவது டி20 தொடரில் பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால்  வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ்...

சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி தீவிரவாதிகள் தாக்குதல்…

செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டு பணியாளர்களுடன் பயணித்த கப்பல் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். 23 பணியாளர்களுடன் பயணித்த பார்படோஸ் கொடி பறக்கவிடப்பட்ட MV True Confidence என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கப்பல்...

இரண்டு மாதங்களில் 341 உயிரிழப்புகள் பதிவு  

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 324 வாகன விபத்துக்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வாகன விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 1355...

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்  

நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டத்தினை தெங்கு செய்கை சபையால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம்,...

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீட்க முடியும்!

ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரச வருமானத்தை அதிகரித்தல் தொடர்பில் யோசனைகள்...

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி தெரிவு செய்யப்படுவார்கள். இதனைத்தொடர்ந்து...

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது..!

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக கடலோடியாக பணிபுரியும் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப் மூலம் அலரிமாளிகை கட்டட சுவர்...

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்..!

நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதுடன் மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு...

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியிக்கே வெற்றி! பசில் ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்ததுடன், இன்றைய தினம்(05) நாடு திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பிய அவர் பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை...
- Advertisement -

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...