Friday, July 10, 2026
No menu items!

News Line

கிரேக்க கப்பலை தாக்கிய ஹௌத்தி

கிரேக்கத்துக்குச் சொந்தமான ஜோக்ராஃபியா (Zografia) என்ற கப்பல் வியட்நாமில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, செங்கடல் பகுதியில் கடந்த ​​செவ்வாய்கிழமை தாக்கப்பட்டுள்ளது. இக் கப்பலிற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது ஹௌத்திகளுக்கு ஈரான் வழங்கிய ஆயுதங்களை கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்த நிலையில் இந்த சம்பவம்...

விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது...

இலங்கைக்கு வருகைதரவுள்ள விஜயை வரவேற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர்

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயின் இலங்கை விஜயத்தின் மூலமாக நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விசேட குழுவொன்றை நியமித்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கு இலங்கையில் படிப்பிடிப்புகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எதிர்காலத்தில் பல இந்திய நடிகர்கள் இலங்கைக்கு...

வற் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த

வற் வரி அதிகரிப்பு தனக்கும் மக்களுக்கும் சிரமமாக உள்ளதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச நேற்று (17) தெரிவித்துள்ளார். களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை  தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் படும் சிரமங்கள் குறித்து தற்போதைய அதிபருக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் "பொதுஜன பெரமுனவினால்...

இன்றும் மழையுடனான வானிலை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். தீவின் மற்ற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடர்

கடந்த வெள்ளிகிழமை கட்டாரில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. தென் கொரியா சார்பாக இன் பியூம் ஹ்வாங் ஒரு கோலையும், கங் இன்...

சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்…

சுவிஸிள்உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் பெறுமதியான கலைப்பொருட்களைக் கொள்ளையடித்த பிரித்தானியாவை சேர்ந்த  இரு சகோதரர்களை சுவிஸ் பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்கள் கொள்ளையடித்த பொருட்களில் ஒரு கலைப்பொருளை 80,000 பவுண்ஸ்களுக்கு ஹொங்ஹொங் நாட்டில் விற்றுள்ளனர். மேலும் சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய சகோதரர்கள், நீதிமன்ற விசாரணையின்போது தன் தம்பி கடனில் சிக்கியிருப்பதாகவும், அவரைத் தப்புவிக்க, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு...

மகிந்தவின் வீட்டிற்கு 50 மில்லியன்ற்கும் அதிக பெறுமதியான ஜெனரேட்டர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டிற்காக 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) மின்சார சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு புதிய வற் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டில் அது கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில்  இன்று (16) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு  முன்பாக மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். சிவில்...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...