Friday, July 10, 2026
No menu items!

News Line

அமெரிக்காவின் ஜிப்ரால்டர் ஈகிள் கப்பலை தாக்கிய ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

யேமனின் கடலோர பகுதியில் பயணித்த ஜிப்ரால்டர் ஈகிள் என்ற அமெரிக்காவின் சரக்கு கப்பலொன்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் கட்டளை பீடம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (15) நடைபெற்ற இத்தாக்குதலால் கப்பலில் இருந்த இரும்புபொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் ஏடன் வளைகுடாவில் தொடர்ந்தும் பயணிக்கின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செங்கடல் பகுதியில் இஸ்ரேலிற்கு செல்லும்...

இந்த வருடம் ஆட்சியை கைப்பற்றுவோம் : அனுரகுமார

இந்த ஆண்டில்  ஏதாவது ஓர் வழியில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் அண்மையில்  இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள  தயார். மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும்...

இ.போ.ச பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நேற்று(15) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேரூந்து ஒன்று சிலாவத்தை சந்திக்கு , அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள்...

பரீட்சை வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அதிகாரி கைது

இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே  சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் அலுவலக உதவியாளர்  ஒருவர்  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 38  வயதுடையவர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளரே இவ்வாறு கைது...

யாழில் . இடம்பெற்ற ராட்சத பட்டத்திருவிழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா நேற்றைய தினம்  (15) நடைபெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். இதில் அதிகளவிலான போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஆகாய விமானம் தாங்கிய...

நாடு முழுவதும் சீரான வானிலை

நாடு முழுவதும்  மழையற்ற  சீரான வானிலை நிலவும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

IMF பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (15) திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

முதலாவது T20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி 20 போட்டி நேற்றைய தினம்(14) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்  இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.​ இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்...

100 ஆவது நாளை கடந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100 ஆவது நாளை கடந்துள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிவடையாது என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற...

இந்தோனேசியாவில் இரண்டாவது முறையாக வெடித்துச் சிதறும் எரிமலை

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் (14) அதிகாலை 6.21 மணியளவில்  எரிமலை வெடித்துள்ளது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனால் அங்குள்ள 150...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...