Friday, July 17, 2026
No menu items!

News

குற்றச்செயல்கள் குறித்து பணப்பரிசு: பொலிஸார் அறிவிப்பு..!

நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளத்தாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா...

சிறைத்தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

அஸ்வெசும தொடர்பில் விசேட வேலைத்திட்டம்..!

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன்...

தரவரிசையில் முன்னேறிய நிஸ்ஸங்க..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். கடந்த வாரம் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பத்தும் நிஸ்ஸங்க மூன்று போட்டிளில் மொத்த 151 ஓட்டங்களை பெற்ற நிலையில் புதிய தரவரிசையில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேநேரம் சரித் அசலங்க 146...

வீதியை விட்டு தடம் புரண்ட பேரூந்து..!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்தொன்று சற்று முன்னர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார்...

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு...

வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்ய முயன்ற  பூசகர் ஒருவரை நேற்றைய தினம் (19) பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய...

வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி விதித்த தடை..!  

பங்களாதேஷ்க்கு எதிராக இலங்கை விளையாடவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாதவாறு சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி  தடை  விதித்துள்ளது. ஐசிசி ஒழுக்கக் கோவைக்கான 2ஆம் நிலை மீறல்களில் வனிந்து ஹசரங்க ஈடுபட்டதால் அவருக்கான தகுதி நீக்கப் புள்ளிகள் 24 மாத காலப்பகுதியில் 8ஆக உயர்ந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையில் கடந்த மாதம் நடைபெற்ற...

போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்ப இஸ்ரேல் சதி..!

காசா பிராந்தியத்தின் மிகப் பெரிய வைத்தியசாலையை இஸ்ரேல் முற்றுகையிட்டதையடுத்து, காஸா போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை குழப்புவற்கு இஸ்ரேல் சதி செய்கிறது என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே குற்றம் சுமத்தியுள்ளார். ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களை தான் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை காஸாவின் அல் ஷிபா வைத்தியசாலை முற்றுகையின்போது, ஹமாஸின் டசின் கணக்கான...

பெற்றோர்களை நெகிழ வைத்த இளம் தாய்..!

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாய் மரதன் ஓட்டப்போட்டியில் நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடியுள்ளார். இச்செயல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளதுடன், அனைத்து  பெற்றோருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்மை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...