Friday, May 29, 2026
No menu items!

News

யாழில் . இடம்பெற்ற ராட்சத பட்டத்திருவிழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா நேற்றைய தினம்  (15) நடைபெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். இதில் அதிகளவிலான போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஆகாய விமானம் தாங்கிய...

நாடு முழுவதும் சீரான வானிலை

நாடு முழுவதும்  மழையற்ற  சீரான வானிலை நிலவும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

IMF பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (15) திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

முதலாவது T20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி 20 போட்டி நேற்றைய தினம்(14) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்  இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.​ இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்...

100 ஆவது நாளை கடந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100 ஆவது நாளை கடந்துள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிவடையாது என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற...

இந்தோனேசியாவில் இரண்டாவது முறையாக வெடித்துச் சிதறும் எரிமலை

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் (14) அதிகாலை 6.21 மணியளவில்  எரிமலை வெடித்துள்ளது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனால் அங்குள்ள 150...

2024 IPL போட்டிகளை இலங்கையில் நடாத்த முயற்சி

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரிடம் தாம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை ஒன்றை விடுத்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை...

மாலைத்தீவு – இந்திய முறுகல் தொடர்கிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் அறிக்கைகளைப் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இச் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் ஏற்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களான மல்ஷா ஷெரிப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஹ்சூம் மஜிட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர் மரியம் ஷியூனா உள்ளிட்டவர்கள் இந்திய பிரதமர்...

யாழில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி – ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸார், நேற்றைய தினம்(13) சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக 23 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட...

திறைசேரியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதானால், அனைத்து அமைச்சக செயலாளர்கள் மற்றும் பிற அரசு நடத்தும் நிறுவன தலைவர்களுக்கு செலவுகளை கட்டுப்படுத்துமாறு திறைசேரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதன்படி, மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, பொருட்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிப்பதற்கோ அல்லது தெரிவு...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...