தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான கொழும்பு மாநகர சபையின் தலைவர் ரொபர்ட் ஹீன்கென்டா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.
ஹீன்கென்டா இதற்கு முன்னரும் பல முறை மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து, பின்னர் அந்த முடிவை மாற்றியிருந்தார் என கூறப்படுகிறது.
எனினும், இன்று (15) அவர் மேயர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








