பிரதமர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘பொதுஜன எக்சத் நிதஹஸ் பெரமுன’ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், அமைச்சர் ரமேஷ் பத்திரனே கட்சியின் செயலாளராக உள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொது உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் புதிய அரசியல் கூட்டணி வெளியிடப்பட்டது.
![]()