Saturday, April 18, 2026
No menu items!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்; நாமல்

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த நாமல், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது பாதுகாக்கப்பட்டு...

வழிபாட்டுத் தலங்களை மீளமைக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறார் நாமல்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் சேதமடைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீளமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மத்திய, ஊவா, வடமேல், சபரகமுவ, மேல், தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏராளமான பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை...

21ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பேரணி: மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் ஏராளமான மக்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ச தனது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் உள்ள புனித தலதா மாளிகையில்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக மாற்ற வேண்டாம் – நாமல் ராஜபக்ஷ!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர்...

நவம்பர் 21-ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பேரணி – SLPP மற்றும் UNP தலைவர்கள் ஆலோசனை!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நவம்பர் 21-ஆம் திகதியிலான எதிர்ப்புப் பேரணி தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைவர்களுக்கிடையில் நேற்று (நவம்பர் 12) ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, இந்தக் கூட்டத்தில் பேரணியின் நோக்கங்கள், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று!!

இன்றைய தினம்(20) ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளதாக கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விழாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்சவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்...

போதைப்பொருள் கொள்கலன் விவகாரம்: அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்காக, பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நாம் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் பெற முயல்கிறது. கொள்கலன்கள் குறித்து பேசப்படுகிறது. அவை துறைமுகத்தில்...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை...

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லை – சாகர காரியவசம்!

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு ஆதரவு...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img