Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

அரேபியாவிற்கு முதல் உத்தியோகபூர்வ விஜயம்; அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான பல முதலீட்டு ஒப்பந்தங்களும் அங்கு கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது கத்தாருக்குச் செல்லவும்...

ரஷ்ய ஜனாதிபதி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் யுக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த...

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்கின்றது . எனவே,...

மோசமான நாடுகளில் ஒன்று கனடா – விமர்சித்த ட்ரம்ப்..!

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இருக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியிருந்தார். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப்...

இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே விசேட சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (18) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். இன்று இடம்பெறும் உக்ரேன் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, 'நிலம்' மற்றும் 'மின் உற்பத்தி நிலையங்கள்' தொடர்பாக தானும் விளாடிமீர் புட்டினும்...

எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை!

வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளமையானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் உள்ள 8 நாடுகளில் எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஹைட்டி, கென்யா, தெற்கு சூடான், மாலி, நைஜீரியா மற்றும் யுக்ரேன் உள்ளிட்ட எட்டு நாடுகள்...

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் கடும் விளைவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏமனிலிருந்து செயற்படும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம்...

டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கியா் ஸ்டார்மா், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக...

போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ள யுக்ரேன்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு யுக்ரேன் தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் சம்மதிப்பார் என தாம் நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் யுக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் யுக்ரேன் அரசு 30 நாட்கள் போர்...

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் நடமாடிய நபரொருவர் மீது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்பைத் தாக்கத் திட்டமிட்டுக் குறித்த நபர் அங்குச் சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img