Saturday, June 27, 2026
No menu items!

பொலன்னறுவை

மாணவனைத் தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்!

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவனைத் தாக்கி காதில் காயம் ஏற்படுத்திய பொலன்னறுவையைச் சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் 2025 மார்ச் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்தார், இதன் போது அவர் மெதிரிகிரிய பொலிஸாருக்கு மாணவி குறித்த நீதித்துறை...

மிதமான நிலையில் காற்றின் தரம்!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (28) காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப்...

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள்!

பொலன்னறுவை, வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கைதிகள் இன்று காலை தப்பிச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறை தெரிவித்துள்ளது. 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட குறித்த நால்வரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

உஸ்வெட்டகேயாவ கடற்கரை கொலைவழக்கில் பெண் உட்பட ஏழு பேர் கைது !

உஸ்வெட்டகேயாவ கடற்கரையில் 40 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை அழைத்துச் சென்ற நபர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் பொலன்னறுவையில் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 21 அன்று கண்டெடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவரின் உடலில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும், அருகில்...

வயோதிபப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

பொலன்னறுவை,மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயோதிபப் பெண் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் பிரதேசவாசிகளும், வயோதிபப் பெண்ணின் மகளும் குறித்த...

11 வயது மாணவனுக்கு நடந்த பெரும் சோகம்!

பொலன்னறுவை, தல்பொத பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவர் ஒருவர், பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்த கால்பந்து கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவையில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் கவிந்து தெனுவன், நேற்று மாலை தனது அக்காவின் விளையாட்டுப் போட்டியைக் காணத் தனது தாயாருடன் பொலன்னறுவை தோபாவெவ மகா...

பொது மக்களுக்கு முகக் கவசங்களை அணிய அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும். இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்...

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும்!

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கல்னேவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதிலும், நெல் விலையிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டால் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்யும்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு...

இன்றைய வானிலை..!

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img