Sunday, May 31, 2026
No menu items!

மஹிந்த ராஜபக்ஷ

ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி காலை 9.00 மணிக்கு முன்னிலையாவார் என கூறினார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க,...

மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதா இல்லையா என்பதை ஜே.வி.பி முடிவு செய்யும்; நாமல்

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எப்போது ஆஜராவார் என்பது குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நாமல், “அவர்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரர் குழு!

தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதியின் தங்காலையில் உள்ள தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பு முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர், “மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மறக்க...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி இன்று (அக்டோபர் 2) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க அவர் ஆஜராகிய நிலையில், விசாரணைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.

விஜேராம இல்லத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ஷ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி வீட்டை காலி செய்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன என்றும், அவர் இன்னும் அதை அதிகாரப்பூர்வமாக...

மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பத்தினர் மீது சிஜடியில் முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர்...

“ஒரு வருட ஆட்சி – எவ்வித வளர்ச்சியும் இல்லை” என NPP ஐ விமர்சனம் செய்த மஹிந்த ராஜபக்ஷ!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்தவொரு வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார். "ஒரு வருட ஆட்சியில், மக்கள் உணரக்...

இனம், மதம் பாராமல் மக்களின் தலைவராகவும் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்; மஹிந்த ராஜபக்ஷ!

உணர்ச்சி ரீதியாக மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசீர்வதித்த மகாசங்கத்தினருக்கு நன்றியையும் தெரிவித்தார். “என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது, இன்றும் அதேபோல் உள்ளது. பதவிக்காலம்...

மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம் என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி!

“Mahinda Sulangin Namal Suwanda” (மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம்) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பிறகு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி பதவியை...

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன் -மஹிந்த ராஜபக்ஷ!!!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சமீபத்தில்  விஜேராமில் இருந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் நேற்றைய தினம் (12) தன்னுடைய  சமூக வலைதளத்தில்  நீண்ட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img