இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எப்போது ஆஜராவார் என்பது குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நாமல், “அவர் இன்னும் ஆஜராகுவதற்கான கடிதத்தைப் பெறவில்லை,” என்று கூறினார்.
மேலும், இந்தத் தகவல் பெலவத்தையில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தாலோ அல்லது கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தாலோ ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது மே தினப் பேரணியில் தெரிவிக்கப்பட்டது, எனவே இது ஒரு அரசியல் அழைப்பாணை,” என்று அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்ய வேண்டுமா இல்லையா என்பதை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) முடிவு செய்யும் என்று கூறிய அவர், மஹிந்த ராஜபக்ஷ பல தடைகளைச் சந்தித்துள்ளார் என்றும், அவற்றை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.







