Tuesday, April 28, 2026
No menu items!

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த பணிப்பு விடுக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் இன்று (23.09.2025) நடைபெற்றது. கடற்றொழில்,...

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்..!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்துகொண்டார். பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும்...

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் குடமுருட்டி கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மணல் அகழ்வு குறித்து பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் முறைப்பாடளித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று...

பிரபல இசையமைப்பாளர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்..!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் நேற்று (22.05.2025) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கடற்றொழில்,...

NPPயின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்..!

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று (30/03/2025) இடம்பெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,...

மீனவர்களுக்கிடையிலான அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் விரைவில் – சந்திரசேகர்!

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் அமைச்சரை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில்...

கச்சத்தீவு தீவில் நடைபெறும் பிரம்மாண்டமான திருவிழா..!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) கச்சத்தீவு தீவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் 3,500க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கலந்து கொண்டதாக நமது நிருபர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா,...

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் NPP ஆட்சி அமைக்கும் – சந்திரசேகர் நம்பிக்கை..!

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போதே அமைச்சர்...

வடக்கின் கை நாட்டு அமைச்சர் – நாய் என தன்னை கூறியமைக்கு அர்ச்சுனா எம்.பி பதிலடி!

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். நிலத் தளவே ஆகுமாம் குணம்.”அந்த அமைச்சருக்கு இது விளங்காது ஏனென்றால் நாயை...

அமைச்சர் சந்திரசேகருக்கும் ஐ.நா சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img