Monday, June 8, 2026
No menu items!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசின் திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று  அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட...

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பட்டலந்த அறிக்கை பற்றி கதைப்பதற்கு ரணில் காலம் தாழ்த்திவிட்டார் – நளிந்த ஜயதிஸ்ஸ..!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கதைப்பதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் நேற்று (3/16/2025) தெரிவித்துள்ளார். வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஏப்ரல் 10 மற்றும் மே மாதங்களில்...

கிழக்கில் கல்முனைப் பகுதியை மையமாகக் கொண்டு தீவிரவாத அமைப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

கிழக்கில் கல்முனைப் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு தீவிரவாத அமைப்பு குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறினார். ஊடகவியலாளர்...

தேசிய திட்டத்துடன் இணங்க வேண்டும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கான நன்கொடைகள் அரசாங்கத்தின் தேசிய திட்டத்துடன் இணங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, பல்வேறு உள்ளூர் பரோபகாரர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். “நன்கொடைகளை முறையாகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். இனி வரும் காலங்களில்...

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சந்தையில் தற்போது நாட்டரிசி மற்றும் ஏனைய அரிசி வகைகளுக்கு நிலவுகின்ற பற்றாக்குறை மற்றும் கடும் மழையினால் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு...

விசேட தேவையுடையோர்க்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img