Monday, May 4, 2026
No menu items!

இன்றைய தினம்

மன்னார் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் வழங்கி வைப்பு!

வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'ஜனாதிபதி  புலமைப்பரிசில் திட்டம்' மன்னார்  மாவட்டத்தில்   ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை(17) காலை இரு பிரிவுகளாக மன்னார் நகர மண்டபத்தில்  இடம்பெற்றது. நாடு முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில்...

கிராம நிர்வாக அலுவலகர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிப்பு!

இன்றைய தினம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் திங்கட்கிழமை (08) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் தற்போது சேவை அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியதற்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால்...

சுகாதார சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது!

இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று நண்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சமந்த கோரளேராச்சி தெரிவித்துள்ளார். மருத்துவமனை ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் பணி, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களுக்கு கடுமையான நடைமுறை, போக்குவரத்துக் கொடுப்பனவு உள்ளிட்ட...

மூடப்படும் கொழும்பு-கண்டி பிரதான வீதி!!!

 பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி இன்றைய தினம் மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் 2 மணித்தியாலங்களுக்கு குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

118 தொகுதிகளை வெற்றி கொள்ளுமா த.வெ.க?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று வரும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான...
- Advertisement -spot_img