Friday, April 24, 2026
No menu items!

இலங்கை போக்குவரத்து சபை

புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளிலும் பயணிக்க முடியும்..!!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தநிலை காரணமாக புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன. அதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து திட்டம்!

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில், பரீட்சார்த்திகள் தங்களின் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லுவதற்கு தேவையான...

நாளை  முதல் மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் நாளை (11) முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகள் காரணமாகக் குறித்த பேருந்து நிலையம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புனரமைப்புப் பணிகள் முடியும் வரை, புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் காயம்!

தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்றைய தினம் (27.08) பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு; பயணிகள் சிரமத்தில்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிணைந்த நேர அட்டவணைகளை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை முறைமையை செயற்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையிலேயே, அந்த...

நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று முதல் ஒன்றிணைந்த நேர அட்டவணையில்!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனையிறவு, கொழும்பு - எலுவன்குளம், கொழும்பு - கல்பிட்டி, நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு -...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவைகள், இணைந்த கால அட்டவணைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் பேருந்து...

ஊழல் நிறைந்த இடமாக மாறியுள்ள இலங்கை போக்குவரத்து சபை!!

இலங்கை போக்குவரத்து சபை ஊழல் நிறைந்த இடமாக மாறியுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிமல் ரத்நாயக்க இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் டிப்போவின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். இதற்கிடையில், பாதுகாப்பான மற்றும் தரமான...

கேகாலை கலிகமுவையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர்...

50 பெண் பேருந்து ஓட்டுநர் நடத்துனருக்கு வாய்ப்பு – இலங்கை போக்குவரத்து சபை..!!

இலங்கை போக்குவரத்து சபை 50 பெண் ஓட்டுநர் நடத்துனர் பதவிகள் உட்பட 750 ஓட்டுநர் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 425 ஓட்டுநர்கள் மற்றும் 275 நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர், இதில் தலா 50 ஆண் மற்றும் 25 பெண் நடத்துனர்கள் உள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் (நிர்வாகம்) இந்திகா...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img