Friday, April 24, 2026
No menu items!

இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்து; பலர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம்...

வடக்கு மாகாணத்தில் சேவை முடக்கல் போராட்டம்: தனியார் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.சபை) வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல்களை கண்டித்து, எதிர்வரும் செவ்வாயன்று (ஜூலை 2) வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, தனியார்...

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து!

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவிசாவளை டிப்போ பேருந்தொன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் இன்று (02) காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்கு காரணம் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து செங்குத்தான சரிவில் மோதி விபத்துக்குள்ளானதோடு, விபத்து நடந்த நேரத்தில் சுமார்...

இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றி சட்டத்தை மீறும் இ.போ.ச!

பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலை - கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த...

கொத்மலை பேருந்து விபத்தில் உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு..!

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இதன்போது, 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த விபத்திலிருந்து உயிர் தப்பியவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஒன்றரை வருடங்களாக வடமேற்கு...

இ.போ.ச முன்னாள் துணைத் தலைவர் பிணையில் விடுதலை..!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) முன்னாள் துணைத் தலைவர்  எல். ஏ. விமலரத்னவை பிணையில் விடுவிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விமலரத்ன இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டார். கதிர்காமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடு ஒன்று தொடர்பான விசாரணைகளுடன் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைதை...

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டார். கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SLTB டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான சேவைகளை வழங்க திட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவைகளை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறும் நபர்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். தற்போது, ​​107 செயல்பாட்டு...

ஸ்ரீ தலதா வழிபாட்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை..!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் இணைந்து அதிகமாகப் பேருந்து மற்றும் தொடருந்துகளை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளன. அதன்படி , கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இரண்டு தொடருந்துகள் மேலதிக சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, நாட்டின் பல பகுதிகளிலிருந்து கண்டிக்கு இலங்கை போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img