Friday, April 17, 2026
No menu items!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு !!

​நாட்டின் பல பகுதிகளில்  'டிட்வா' சூறாவளி  (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது. ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக...

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய வரி வாரம்!

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல்...

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிரேஷ்ட பிரஜைகளின் காலாண்டு வருமான வரியை மீளப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு..!

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அதற்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய பிரகடனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு..!

நாட்டில் சூதாட்ட விடுதிகள், பந்தயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பெப்ரவரி மாதத்திற்கான வரிகளை இந்த மாதம் 7 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை, மார்ச் மாதத்திற்கான வரிகளை ஏப்ரல் முதல் வாரத்தில் அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு 9 நிபந்தனைகளுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது..! ..!

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை, 2025 ஜனவரி 31 ஆம் திகதிய வர்த்தமானி இலக்கம் 2421/44 ஊடாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளது.  பிப்ரவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள், பல்வேறு வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றன. தனிப்பட்ட...

அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது; ஜனாதிபதி!

மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், பிரதான அரிசி விற்பனையாளர் ஒருவர் வரி...

மதுபான உரிமம் பெற்றவர்களிடம் இருந்து கடிதம்!

மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனுமதி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், சில மதுபான உரிமம் வைத்திருப்பவர்களின் உரிமங்கள் 2025 ஜனவரி 31 வரை மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த தவறுக்காக, இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் கலால் ஆணையாளர் ஜெனரல் உதய...

இலங்கையின் வரி வருமானம் அதிகரிப்பு..!

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 1,958.08 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 1,565 மில்லியனிலிருந்துடன், 25.1 சதவீதம் வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது. வருமான வரி மற்றும் பெறுமதி சேர்ப்பு வரி மூலம் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலி சந்திரசேகர தெரிவித்துள்ளார். இறைவரித் திணைக்களம் 1,023.2 மில்லியன் ரூபாவை...

வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்க திட்டம்….!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுகளில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை(07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img