Sunday, April 19, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சகலதுறை கிரிக்கட் வீரர்..!

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14.08) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டுள்ளார். ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், சிறிது காலம் அதன் தலைவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட விஜித் விஜயமுனித சொய்சா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனித சொய்சா இணைந்து கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திங்கட்கிழமை (12) பிற்பகல் சந்தித்த விஜித் விஜயமுனி த சொய்சா, ஜனாதிபதிக்கு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அரசியல் செய்வதற்கு நாடொன்று இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர்,...

பாராளுமன்ற பதவிக்கு நிலவும் வெற்றிடம்..!

மனுஷ நாணயக்கார மற்றும்  ஹரின் பெர்னாந்து ஆகியோரின் பாராளுமன்ற உறுப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக 2024.08.09 முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்...

சஜித் பிரேமதாசவுடன் மொட்டுகட்சி அமைப்பாளர் இணைவு..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று (11.08) இணைந்து கொண்டுள்ளார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த ப.சந்திரகுமார் என்பவரே இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். இந்நிலையில், எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச கட்சி...

ரணிலுக்கு கிடைக்கும் அடுத்த ஆதரவு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்ன நாளை (13.08) காலை அரசாங்கத்தில் இணையவுள்ளார். கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள வைபவமொன்றில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜித சேனாரத்ன நேற்று (11.08) களுத்துறை மாவட்டத்தில்  தனது செயற்பாட்டாளர்களை அழைத்து ஆலோசனை...

இழக்கப்படும் அமைச்சு பதவி: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு..!

அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் வெளியேற்றம் அவர்களின் பாராளுமன்ற ஆசனங்களையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க நேரிடும் என...

சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்? இரண்டு பேர் கடும் போட்டி..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ள லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு இடையில் இந்த போட்டி ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் மத்தும...

கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தரப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் சற்று முன்னர் பத்திரமுல்லையில் அமைந்துள்ள வாட்டர் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுதந்திர கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும்  இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்…

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05.08) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார். அவரது மனைவியும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளராக கடமையாற்றி...

வாகன விபத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் , ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் காரும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும், மூவரும் நாரஹேன்பிட்டி  தனியார் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img