Sunday, June 14, 2026
No menu items!

சுற்றறிக்கை

பொது பாதுகாப்பு குழுக்களை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

பொது பாதுகாப்பு குழுக்களை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

அரச நிறுவன பிரதானிகளுக்கு விசேட அறிவித்தல்..!

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கை...

அரச நிறுவனங்களுக்கான வாகனங்கள் ஏலத்தில்..!

அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் அதன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அறிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்கள பிரதானிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டு நிதியமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார். இவ்வாறு ஏலம்...

அரச பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணியாளர்களுக்கு 25,000 ரூபாய் அல்லது 20,000 ரூபாவை ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்குமாறு நிதியமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிதியச் சட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டில்...

ஆசிரியர்களின் வருமானத்திற்கு முட்டுக்கட்டை போட்ட கல்வி அமைச்சு..!

மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க இந்த  சுற்றறிக்கையை  வெளியிட்டுள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களிடம் மேலதிக வகுப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் வகுப்புகளில் கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை நேரங்களுக்கு பின்னர் அல்லது வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெவ்வேறு...

எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்; பரீட்சை ஆணையாளர் நாயகம்!

எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.15 மணிவரை நடைபெறவுள்ளது. அதனால், பரீட்சை நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்...

ஓய்வூதியம் பெறுவோருக்கு இடைக்கால கொடுப்பனவு!

ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் மாதத்திற்கான நிலுவைத் தொகையுடன், ஒக்டோபர் மாதம் கொடுப்பனவு வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர அறிவித்துள்ளார். அரசாங்க ஓய்வூதியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு அண்மையில்...

சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் மற்றும் ஆணையாளர்கள் நியமனம்!

கல்வி அமைச்சினால்  வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026)  செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர், சுற்றாடல் முன்னோடி வலய மற்றும் கோட்ட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (07.06.24) யாழ்மாவட்ட செயலகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img