Thursday, April 30, 2026
No menu items!

நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  800 ஆக அதிகரிப்பு!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, நில அதிர்வினால் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு !

ரஷ்யாவின், கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நில அதிர்வினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், ஆழிப்பேரலை அறிவிப்பு குறித்த விவரங்களும் வெளியாகவில்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த...

திபெத் நாட்டில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..!

திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

தாய்வானில் நில நடுக்கம்..!

தாய்வானில் 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் 21 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மார் நில அதிர்வில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் சீன மீட்பு குழு!

மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது. இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று (3/29/2025) மியன்மாரை சென்றடையவுள்ளது. மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை உணவு ,...

சீனாவில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 4.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.25 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   <!-- -->

மியான்மாரில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு!

மியான்மாரில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.03அளவில் 4.2 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. <!-- -->

கதி கலங்க வைத்த நில அதிர்வு..!

நேபாளத்தில் இன்று (21.12.2024) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 4.8 மெக்னிடியூட் அளவில் இந்நில அதிர்வு பதிவானதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளால் சுமார் 9,000...

கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு..!

வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு வடக்கே 260 மைல் தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ஃபெர்ண்டேல் நகருக்கு மிக அருகில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் உயிரிழப்புகள் அல்லது பாரியளவிலான சேதம் ஏற்படாத போதிலும்,...

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு..!

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img