Tuesday, July 28, 2026
No menu items!

பாலியல் வன்கொடுமை

தேரரின் 10 வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து!

பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த துறவியின் தண்டனையை இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பதின்வயது முறைப்பாட்டாளரின் சாட்சியத்தில் இருந்த முக்கிய முரண்பாடுகள் காரணமாக அது "நம்பகத்தன்மையற்றது" என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 மார்ச் மாதம், விகாரையின் குடியிருப்புப் பகுதிக்குள் வைத்து 13 வயது சிறுவனைத் துன்புறுத்தியதாக சீதாவக்க சொரத்த...

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த ஹெவவசம் கடந்த வியாழக்கிழமை (30) அன்று 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மொனராகலை, எத்திமலையைச் சேர்ந்த, குற்றம் சாட்டப்பட்ட உருமுத்த கமகே சந்தன (47)2015-ஆம் ஆண்டில்...

வைத்தியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் – விசாரணைகள் ஆரம்பம்..!

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி, பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற தனது தாயுடன் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு வந்த இளம் பெண், தன்னை...

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியமை குறித்து ஹம்சிகா ராஜ்குமாரின் குற்றச்சாட்டு!

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நேரிட்டது என யாழ் தீவக பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டினார். நேற்று திங்கட்கிழமை அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்...

வானில் விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி கைது..!

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (15/03/2025) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க...

பணியிடத்தில் பெண்களைப் பாதுகாப்பதற்கு சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டம்!

இலங்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் பணியிடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறுகிறார்  . ஊடகங்களுக்குப் பேசிய துணை அமைச்சர் ஜெயசிங்க, வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 190 ஆம் ஆண்டு உடன்படிக்கையை அங்கீகரிக்க அரசாங்கம்...

அனுராதபுரம் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்பட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு...

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று (12/03/2025) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது. இதன்...

சந்தேகநபரை கைது செய்த பின்னரும் தொடரும் போராட்டம்..!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் நாளை (13/03/2025) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ...

நாளையும் தொடரும் பணிப்புறக்கணிப்பு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img