Saturday, May 30, 2026
No menu items!

பொலிசார்

பேருந்தில் தனியாக இருந்த சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை நேற்று புதன்கிழமை (28/1/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ளதுடன் தந்தையின் பராமரிப்பில்...

திருடப்பட்ட வலம்புரி – மர்மமாக விகாரையின் கிணற்றிலிருந்து மீட்பு..!

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடங்கொடை ஹெலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் திருடப்பட்ட வலம்புரி அதே விகாரையின் கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மிகவும் பெறுமதியான இந்த வலம்புரி திருடப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்தது. நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வலம்புரியை திருடிய நபர் குறித்த தகவல்களை...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் சிக்குண்ட விவசாயி ஒருவர் விமானப்படையினரால் மீட்பு..!

மட்டக்களப்பு  புல்லுமலை  தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் இரு தினங்களாக சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒரு விவசாயியை விமானப்படையினர் கெலிகொப்டர் மூலம் இன்று (27.11.2024) புதன்கிழமை மீட்டனர். குறித்த பகுதியிலுள்ள வயல்களில்...

16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவன் கைது…!

பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய  சிறுவன் ஒருவரை  நேற்று வெள்ளிக்கிழமை (27.09)  கைது செய்யப்பட்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம்...

களுதாவளையில் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24.09.2024) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்....

வவுனியா மாவட்டத்தின் வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

நாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள்...

தேர்தல் காலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான ஜனாதிபதித் தேர்தலை உறுதி செய்வதற்காக இலங்கை காவல்துறை 63,000 அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளது. இந்த அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்படுவார்கள். பொலிஸாருக்கு மேலதிகமாக, எந்தவொரு இடையூறுகளையும் தடுக்க முக்கிய பொருளாதார மையங்களுக்கு இராணுவம் நிறுத்தப்படும். சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10,000 அதிகாரிகள் காவல்துறைக்கு அவர்களின்...

வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக யுவதியொருவர் உயிரிழப்பு!

நிட்டம்புவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த யுவதி தனது சக ஊழியர்களுடன் விருந்துபசார நிகழ்வொன்றிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய யுவதி திடீர் சுகவீனமடைந்த நிலையில் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வரகாபொல - அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21...

மட்டக்களப்பு பழுகாமம் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு !

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் இருவரை பொலிசார் கைது...

பிரித்தானியாவில் கத்தி குத்து!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கத்தி குத்து மேற்கொண்ட 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த கத்திக்குத்துக்கான...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img