Friday, June 5, 2026
No menu items!

மன்னார்

மன்னார் கடலில் ஏழு பேர் கைது..!!

இந்திய கடற்றொழிலாளர்கள் எழு பேரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இன்று பகல் கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரும் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார். விசாரணைகளின் பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களை, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

மன்னாரில் பூரண கடையடைப்பு- 2 வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) மன்னாரில் அமைதியான முறையில்...

மன்னார் தீவு பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு-அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்து திட்டத்தை நிறுத்த நடவடிக்கை!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு...

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது!!

நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, 5 விசைப்படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, காவல்துறையினருடன், கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பின்...

தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி..!!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தித் துறையில் மாற்றம் தரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின்...

மன்னார் மாவட்டத்திற்கு மேலதிக அரச அதிபர்கள் நியமிப்பு!

மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர்கள்  பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் குறித்த இருவரும் இன்றைய தினம் புதன்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய  மனோகரன் பிரதீப் மன்னார் மாவட்ட மேலதிக...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு  நேற்று புதன்கிழமை காலை (23.07.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண...

மன்னார் இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்று சாதனை !

மன்னார் மாவட்டம் விடத்தல்தீவையைச் சேர்ந்த இளைஞர் அனுஜன், ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ள பெருமைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. அவர் தமது ஆரம்பக் கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியில், மேலும் தரம் 1 முதல் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் பெற்றார். தற்போது, ஒரு விமானத்தில் தலைமை விமானியாக (Captain Pilot) பணியாற்றக்கூடிய மேன்மட்ட உரிமத்தை...

மன்னாரில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..!

மன்னாரில்  வறுமைக் கோட்டிற்கு   உள்ளான பெண் தலைமைத் துவத்தை கொண்ட கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு நேற்றையதினம்(18) வெள்ளிக்கிழமை (18) வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஒழுங்கு அமைப்பில் புலம்பெயர் நாட்டில்   வசித்து வரும் ஒரு குடும்பத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img