Saturday, May 9, 2026
No menu items!

மஹியங்கனை

மஹியங்கனையில் புதையல் தோண்டிய நபர்கள் கைது!

மஹியங்கனை திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரொட்டலவெல, திவுல்பலஸ்ஸ மற்றும் கிராதுருகோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மூன்று சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!

கொழும்பு, புறக்கோட்டை,  ரெக்மலேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (05.10) அதிகாலை 1.3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி…!

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு  நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, அவரது சகோதரர், தாய்...

வேன் ஒன்று பஸ்ஸுடன் மோதி விபத்து!

மஹியங்கனையிலிருந்து பிபில நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, வேனின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த 11 தேரர்களும் காயமடைந்துள்ள நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைளின்...

25 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி….!

மஹியங்கனை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இரவு வேளையில் பணிபுரிந்த சுமார் 25 பெண் தொழிலாளர்கள் அவசர ஒவ்வாமை காரணமாக மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை கெமுனுபுர ஆடை மண்டபத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த ஒவ்வாமைக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

புதையல் தோண்டிய மூவர் கைது…!

புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய  பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ்...

100 போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 100 போதைமாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிகொலால மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொழும்பில் இருந்து  போதைப்பொருளை கொண்டு வந்து  மஹியங்கனை பகுதிகளில் விற்பனை...

மதுரங்குளிய பிரதேசத்தில் மாயமான சிறுவன் பிக்குவாக துறவறம்..!

மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து, கடந்த  சில நாட்களுக்கு முன் காணாமல் போன 12 வயதுடைய சிறுவன், கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் இருந்த சிறுவன், குடும்பத்தினர் மீதான அதிருப்தியில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். இதையடுத்து கொழும்புக்கு வந்த குறித்த சிறுவனை பிக்கு...

தொண்டையில் மாத்திரை சிக்கி உயிரிழந்த சிறுமி..!

மஹியங்கனையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் நேற்று(12) உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img