Wednesday, April 29, 2026
No menu items!

விசேட வர்த்தமானி

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து !

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக பொது முகாமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறு அறிவித்தல் வரை இந்த விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது...

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்..!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 5 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் மீள ஆரம்பிக்கும்போது விதிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி விகிதங்களை...

ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..!

ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ரின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட கானாங்கெளுத்தியின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகும். மேலும், 425 கிராம்...

விசேட வர்த்தமானி அறிவித்தல் – டிசம்பர் 14 முதல் அமலுக்கு..!

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மணிக்கு பின்னரும் வாக்களிக்க வாய்ப்பு..!

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு...

மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு..!

பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விதத்தில் தூக்கிலிடப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பேதிரிஸுக்கு, 109 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதியினால் மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (12.09) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுநர் ரொபர்ட் சாமர்ஸ் வெளியிட்ட பிரகடனத்தின் மூலம்...

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு…!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை...

நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானம்!

தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் நிதி, சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் கையொப்பத்துடன் இது குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகளுக்கும் அதனுடன் தொடர்புடைய 210 நபர்களுக்கும் எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின்...

சட்டவிரோத தங்கம் இறக்குமதி; 5 நிறுவனங்களுக்கு அபராதம்!

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நிறுவனங்களுக்கு 124 கோடி 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதில் ஒரு நிறுவனத்துக்கு 17 கோடி 90 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தங்கம் இறக்குமதியை மேற்கொள்ளும் அனைத்து...

தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

தொழில் ஆணையாளர் நாயகத்தால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த அறிவித்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img