Tuesday, July 28, 2026
No menu items!

விசேட வைத்திய நிபுணர்

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டம்: சுகாதார அமைச்சால் புதிய குழு நியமனம்!

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை உருவாக்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு சிறப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இக்குழுவை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நியமனம், விசேட வைத்திய நிபுணர்களைச் சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி...

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை –வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு ஆபத்தான நோய் அல்ல என்ற போதிலும், சிறுவர்கள் மற்றும் 65...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்..!

சுவாச நோயைப் போன்று எதிர்காலத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்றும் அதனை எதிர்கொள்வதற்கு எமது வைத்தியசாலை கட்டமைப்புகள், இரசாயன ஆய்வுகூட கட்டமைப்புகள், பயிற்சிப்பெற்ற சுகாதார சேவையாளர்கள் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

விசேட வைத்திய நிபுணர் மீது தாக்குதல் – ஒருவர் கைது..!

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (28/03/2025) பிற்பகல் கேகாலை பொது வைத்தியசாலையின் முன்னால் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக விசேட வைத்திய நிபுணரை குறித்த நபர் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியில் வசிக்கும் 29 வயதானவர் என...

சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் புற்றுநோய்!

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறை காணப்படும் யாழ் வைத்தியசாலை-சிவஞானம் சிறிதரன் கோரிக்கை..!

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும் என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார். "பல்...

எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த 2023 ஆண்டில் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானோர் 15 முதல்...

விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என தீர்ப்பு!

2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷாபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முறைப்பாடு செய்தவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதாலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரிலும் குருநாகல் நீதவான் பந்துல குணரத்ன ஷாபி சிஹாப்தீனை அனைத்து...

அதிகரித்து வரும் நீரிழிவு…!

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ​டாக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஒரு மணி...

சீரற்ற காலநிலையால் பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img