Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

ஆக்ரோஷமான எதிர்வினையை மேற்கொண்ட இரு வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி..!

போர்டர்-கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது களத்தில் நடந்த சம்பவத்திற்காக இந்திய வீரர் மொஹமட் சிராஜ் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையை மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் மொஹமட் சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில்...

தொழிலுக்காக 4,500 இலங்கை பணியாளர்கள் இஸ்ரேல் பயணம்..!

இஸ்ரேலில் நிர்மாணத்துறை தொழிலுக்காக 4,500க்கும் அதிகமான இலங்கை பணியாளர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 1,802 பேர் தொழிலுக்காக இஸ்ரேல் செல்லவுள்ளனர். இஸ்ரேலில் நிர்மாணத்துறை தொழில் வாய்ப்புக்காக சீட்டிழுப்பு முறைமை மூலம் பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வெளியானது வர்த்தமானி..!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை  215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச...

தடைகளை உடைத்து சாதனை படைத்த வீரமங்கை  – ரவிகரன் எம்.பி வாழ்த்து..! 

மன்னார் - தோட்டவெளி அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவியான அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பல தடைகளைக் கடந்து  ஈட்டி எறிதலில் தேசியரீதியில் தங்கத்தை சுவீகரித்து ஒட்டுமொத்த வன்னிமண்ணுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு யதுர்சிகாவின் சாதனைப் பயணமானது தொடர்ந்து ஆசிய மற்றும், சர்வதேச ரீதியிலும் வியாபிக்கவேண்டுமென ரவிகரன் தனது...

அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி..!

அரச கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டால் மாத்திரமே  இலங்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று(09)  இடம்பெற்ற தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி...

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபாய் மோசடி..!

நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்றைய தினம்(09)  உத்தரவிட்டார். கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச்...

அர்ச்சுனா எம்.பி -க்கு எதிரான விசாரணை ஆரம்பம்..!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த....

இன்றைய நாளுக்கான வானிலை..!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை - தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு...

3 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு..!

சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தை தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரியும் தம்பதிகள் எனவும், இந்த குழந்தை அவர்கள் இருவருக்கும் இரண்டாவது...

அர்ச்சுனா எம்.பி -க்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு..!

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img