July 14, 2025
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி-மஹிந்த அதிரடி அறிவிப்பு…!
இலங்கை அரசியல் உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி-மஹிந்த அதிரடி அறிவிப்பு…!

May 17, 2024

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை.

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *