December 13, 2025
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட  இலங்கையர்
News News Line Top Updates புதிய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

Mar 1, 2024

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதான இலங்கையரால் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர், மெல்பேர்னில் உள்ள பிரபல குற்றக் குடும்பத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஏனைய 5 சந்தேகநபர்களும் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *