துபாயில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஒருநாள் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி நாளைய தினம் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டியதனால் இவ்விறு அணிகளும் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி நடப்புச் செம்பியனான இந்திய அணியை 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மற்றைய அரையிறுதிப் போட்டியில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அணி வெற்றி பெற்றது.

ஆசிய கிண்ணப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் விளையாடும் முதல் இறுதிப் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here