November 18, 2025
இன்றும் பல பகுதிகளில் மழை
Top புதிய செய்திகள்

இன்றும் பல பகுதிகளில் மழை

Dec 7, 2023

நாட்டின் பல மாகாணங்களில் பி.ப . 1.00 மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் முற்பகல் வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *