அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென தெரிவித்துள்ளது.
சோறு, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கப்படுமென , சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பே இதற்கு காரணமெவும் தெரிவித்துள்ளார்.