வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு 4 ம் திருவிழாவான நேற்று சந்நிதியான் ஆச்சிரம சைவக்கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் “வினை தீர்ப்பான் வேலன்” என்ற ஆன்மீக தலைப்பில் அருளுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினரும், ஆசிரியரும், சைவப்புலவருமான தக.கைலநாதன் நிகழ்த்தியுள்ளார்.
நேற்று புதன்கிழமை காலை 10.45 மணி தொடக்கம் 11.45 மணி வரை இடம்பெற்ற இவ்நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.







