November 18, 2025
பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்..!

Mar 25, 2024

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் வழங்குவதற்கு , அறிமுகம் செய்யப்பட்ட 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 4 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அவற்றில் 42 முறைப்பாடுகள் தொடர்பில், நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  நிலையில் 8 முறைப்பாடுகள் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , 550 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளத்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *