Wednesday, June 18, 2025

மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!

Must Read

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது.

இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் , அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந் நிலையில் இவர் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார் இதன்போது மனைவி அயலவர்களுடன்   இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள முன்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img