Tamil News Channel

மாரிஸ் ஸ்டெல்லா,லைசியம் வெற்றி – ரிட்ஸ்பரி அஞ்சலோட்ட களியாட்டம்..!

33

இலங்கையின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக மூன்று நாள் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ரிட்ஸ்பரி அஞ்சலோட்ட களியாட்டம் அண்மையில் பதுளை, வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நிறைவடைந்தது.

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனம் மற்றும்
நிகழ்வின் ஏக அனுசரணையாளராக ரிட்ஸ்பரி ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு
செய்திருந்தன.

நாடு முழுவதிலும் இருந்து 220க்கும் அதிகமான பாடசாலைகளின் 4,000க்கும் அதிகமான இளம் மெய்வல்லுநர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆண்கள் பிரிவு மொத்தம் 87 புள்ளிகளுடன் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி இரண்டாமிடத்தையும், கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரி மூன்றாமிடத்தையும் சுவீகரித்தன.

பெண்கள் பிரிவில், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை அணி சம்பியன் பட்டம் வென்றதுடன், 120 புள்ளிகளை பதிவு செய்திருந்தது. வலல ஏ ரத்நாயக்க சி சி, மெனிக்ஹின்ன இரண்டாமிடத்தையும், கம்பஹா புனித சிலுவைக் கல்லூரி மூன்றாமிடத்தையும் வென்றன.

வெற்றியாளர்களை தெரிவு செய்வதற்கு மேலதிகமாக ரிட்ஸ்பரி அஞ்சலோட்ட களியாட்டம் 2024 பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமைந்திருந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த இளம் மெய்வல்லுநர்களில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவதற்கான களமாக அமைந்திருந்தது.

தேசத்தின் விளையாட்டு எதிர்காலத்தை கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, ஆரோக்கியமான போட்டித்திறன் மற்றும் விளையாட்டுப் பண்புகளையும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts