ஹொரணையில் உள்ள ஒரு அரச வங்கியில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி முகாமையாளரை,ஆறு நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை நீதவான் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, எதிர்வரும் 11ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







