விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள உரம்..!
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் உரம் இலங்கைக்குக் கிடைக்கப்பெற உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கை காலங்களுக்குத் தேவையான அடிகட்டு உரம், இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
![]()