கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் மனைவி இருந்துவந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த நபர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.