November 13, 2025
 வேலைவாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள்
News News Line Top புதிய செய்திகள்

 வேலைவாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள்

Dec 15, 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக  நான்கு ஆண்டுகளில்  07 இலட்சத்து 32 ஆயிரம் மக்கள் இலங்கையிலிருந்து சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன.

இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்ட பின்னரே சட்ட ரீதியாக மேற்படி 07 இலட்சத்து 32 ஆயிரம் பேரும் வெளிநாடு சென்றுள்ளனர்.

இலங்கையர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும் தொழிலாளர்களாகவும் மின்சார கைத்தொழில் துறை வேலைவாய்ப்புக்காகவும் சாரதி உள்ளிட்ட ஏனைய தொழில்களுக்காகவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குருநாகல் கிளை பணியகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுக்கு இணங்க, இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *