நாடளாவிய ரீதியில் தற்போது, க்ளுகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்திலேயே இந்த க்ளுகோமா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்,உரிய சிகிச்சையை பெறாவிடின் இறுதியில் பார்வையை இழக்க நேரிடம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதைக் கடந்தவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர் உடனே கண் சிகிச்சை வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here