அமெரிக்க அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பி628 ரகக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றும், இந்த கப்பல் இலங்கை கடற்படையில் இணைவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கப்பலின் முறையான ஒப்படைப்பு விழா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இன்று (04) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here